சிவன்மலையில் கபடி போட்டி 60 அணிகள் பங்கேற்பு

காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலையில்  இந்தியன் பாய்ஸ் அணி நடத்தும் இரண்டாம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியைச் சேர்ந்த இந்தியன் பாய்ஸ் அணியினர் ராஜேஷ் மற்றும் வினோத் நினைவாக இரண்டாம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது இரண்டு நாட்கள் இரவு மின் ஒளியில் நடத்தப்பட்டது. கபடி போட்டியை திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா ஏ சண்முகம் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 60 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். முதல் பரிசு கேஜிஐ கல்லூரி அணி நத்தக்கடையூர், இரண்டாம் பரிசு ஐ கே ஸ்போர்ட்ஸ் கிளப் அணி அணைப்பதி ,மூன்றாம் பரிசு 7 பிரதர்ஸ் அங்கேரிபாளையம் அணியும், நான்காம் பரிசு சக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் காங்கேயம் அணியும் வெற்றி பெற்றிருந்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் சிறப்பு விருந்தினராக காங்கேயம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர் , சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி , ஏ.சி தங்கவேல் செயலாளர் பாரதி வீர விளையாட்டு கழகம் சென்னிமலை, பிரவீன் தாளாளர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஈங்கூர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story