அணைக்கட்டு அருகே 600 லிட்டர் கள்ள சாராயம் ஊறல் அழிப்பு

அணைக்கட்டு அருகே 600 லிட்டர் கள்ள சாராயம் ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு

வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய சாராயப் வேட்டையில் கள்ள சாராய ஊறல்கள் மற்றும் சாராயம் அழிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜார்தான் கொள்ளை மலைப்பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் இன்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் கள்ள சாராய ஊரல் மற்றும் 300 லிட்டர் கள்ள சாராயத்தை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story