பாசனத்திற்கு 619 மில்லியன் கனஅடி நீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

பாசனத்திற்கு 619 மில்லியன் கனஅடி நீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

நீர் திறப்பு 

87 கண்மாய்கள் பாசன வசதி பெறும்

சிவகங்கை மாவட்ட பூர்வீக இரண்டாம் பகுதி பாசனதிற்காக வைகை ஆற்றில் இருந்து 619 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி விரகனூர் மதகு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பார்த்திபனூர் மதகு அணைவரை செல்கிறது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வைகையாற்றை ஒட்டிய 87 கண்மாய்கள் பாசன வசதி பெறும் இதன் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Tags

Next Story