நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் 62 கிலோ பறிமுதல்

நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் 62 கிலோ பறிமுதல்

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

குமாரபாளையம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் குமரன், உத்திரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யும் பணி நடந்தது. குமாரபாளையம் நகரில் உள்ள ஓட்டல்கள், பூக்கடைகள், பேக்கரிகள், பழக்கடைகள், மொத்த வர்த்தக கடைகள், சாலையோர கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் டம்ளர்கள், மற்றும் பிற பொருட்கள் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வர்கள் சந்தானகிருஷ்ணன், ஜான் ராஜா, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story