ரூ.6.40 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ரூ.6.40 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி  தொடக்கம்
சிவகங்கை அருகே சூரக்குளம் புதுக்கோட்டையில் பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் மூலம் ரூ.6.40 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
சூரக்குளம் புதுக்கோட்டை ஊராட்சியில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசணிப்பட்டியிலிருந்து வஸ்தாபட்டி வழியாக கருங்காபட்டி வரை 8 கி.மீ. தொலைவு வரை கனரக வாகனங்கள் செல்லத்தகுந்த வகையில், ரூ.6.40 கோடியில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் பணியை ஊராட்சி மன்றத் தலைவா் மலைச்சாமி நேற்று தொடங்கிவைத்தாா்.
Next Story