வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 6662 பேருக்கு வேலை

வேலைவாய்ப்பு  முகாம்கள் மூலம் 6662 பேருக்கு வேலை

வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 6662 பேர் வேலை பெற்றுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக 1144 தனியார் நிறுவனங்களில் 6662 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக இன்று காலை 11 மணியளவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது, படித்த இளைஞர்கள் அரசு , தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சித் துறை போன்ற துறைகளின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் , வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தகுதிக்கேற்ப பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

Tags

Next Story