மதுராந்தகம் அருகே மின்சாரம் தாக்கி ஆறாம் வகுப்பு மாணவன் பலி !!

மதுராந்தகம் அருகே மின்சாரம் தாக்கி  ஆறாம் வகுப்பு மாணவன் பலி !!

மாணவன் பலி

மதுராந்தகம் அருகே மின்சாரம் தாக்கி 11 வயது மாணவன் பலி. போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள அச்சரப்பாக்கம் திம்மாபுரம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மூத்த மகன் விஷ்ணு (வயது 11).இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

அவரது பக்கத்து வீட்டின் வீட்டின் உரிமையாளர் அனலை என்பவருக்கு சொந்தமான வீட்டின் மின் ஒயர் தொங்கிய நிலையில் இருந்ததால் அதன் நடுவே முட்டு கொடுப்பதற்காக இரும்பு பைப்பு வைத்து மின்சார ஒயரை கட்டி நிறுத்தி வைத்து உள்ளார்.

விஷ்ணு இரும்பு பைப் என நினைத்து கையில் பிடித்து விளையாட முயன்ற போது எலக்ட்ரிக் ஷாக் அடித்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி நிலையில் இருந்த அவரை அச்சரப்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு பரிசோதனை செய்தபோது விஷ்ணு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அச்சரப்பாக்கம் போலீசார் இறந்த விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும்,வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story