கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 7 அடி உயர குடில்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 7 அடி உயர குடில்

7 அடி உயர குடில் அமைப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள லொயோலா எல்சியத்தில் உள்ள திருச்சிலுவை ஆலயத்தில் நேற்று சிறப்பு திருப்பலி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த தேவாலயத்தில் சுமார் 7 அடி உயரமுள்ள குடில் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பிரம்மாண்டமான குடிலைக் கான வேலாயுதபுரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் கலந்துகொண்டு குடிலை வழிபட்டுச் செல்கின்றனர். மேலும் வருகின்ற வருடம் விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர்கள் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.


Tags

Next Story