பணம் கேட்டு மிரட்டல் - இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 7 பேர் கைது

பணம் கேட்டு மிரட்டல் - இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 7 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்கள் 
கடையநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை பணம் கேட்டு மிரட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிளாங்காடு ஊராட்சி மன்றத் தலைவரை மிரட்டி 20 லட்சம் ரூபாய் பணம் கேட்ட இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யயப்பட்டனர். இந்து மக்கள் கட்சி தலைவர், இவருடன் சேர்ந்த நபர்கள் கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டி 20 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்த ஊராட்சி மன்ற தலைவர் காவல்நிலையம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஏழு நபர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர்கள் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story