மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது, டூவீலர்கள் பறிமுதல்.

மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது, டூவீலர்கள்  பறிமுதல்.

சூதாட்டம் 

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலத்துறை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் நந்தகோபாலுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாலத்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து சூதாடிய 7- பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அந்த இடத்திற்கு செல்வதற்காக அவர்கள் பயன்படுத்திய 4- டூவீலர்களையும், பணம் வைத்து சூதாட பயன்படுத்திய 52- சூதாட்ட அட்டைகளையும் ரூ.500 ரொக்க பணத்தையும். பறிமுதல் செய்தனர். இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட புகலூர் தாலுக்கா, மூலிமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தெய்வேந்திரன், கரூர் திருவள்ளூர் நகர் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன், திருக்காம்புலியூரை சேர்ந்த கவியரசன், நாமக்கல் மாவட்டம், போத்தனூர் அரசன் காட்டு தெருவைச் சேர்ந்த கோபிநாதன், கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்த கண்ணன், புன்னம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், பிரகாஷ் ஆகிய 7- பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர்

Tags

Next Story