பேருந்தில் பெண் தொழிலாளியிடம்‌ 7 ½ சவரன் தங்க சங்கிலி திருட்டு

பேருந்தில் பெண் தொழிலாளியிடம்‌ 7 ½ சவரன் தங்க சங்கிலி திருட்டு

செயினை பறிக்கொடுத்த தொழிலாளி


மணப்பாறை அருகே பேருந்தில் பெண் கட்டிட தொழிலாளியிடம்‌ தங்க சங்கிலியை திருடிய பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கள்ளை பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. கட்டிடத் தொழிலாளியான இவர் இன்று காலை அரசு பேருந்தில் மணப்பாறைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 ½ சவரன் தங்க சங்கிலி திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதார்.

இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் மணப்பாறை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண் ஒருவர் சகுந்தலாவை அருகில் அமரச் சொன்னதாகவும், அவர் அருகில் அமர்ந்திருந்த நிலையில் தான் சங்கிலி மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மர்ம பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story