கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை -  நீதிமன்றம் தீர்ப்பு

கணேசன், அண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லேரி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் மீது சொத்து பிரச்சனை காரணமாக இருந்த முன்விரோதத்தால் கொலை முயற்சி தாக்குதல் நடத்திய வழக்கில் கணேசன், அண்ணாமலை ஆகிய இருவரை கைது செய்து நாகரசம்பட்டி காவல்துறை வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு ஊத்தங்கரை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணகுமார் ராஜவேலு குற்றம் சாட்டப்பட்ட வளையாம்பட்டு கணேசன் மற்றும் கல்லேரி அண்ணாமலை ஆகிய இருவருக்கு தலா ரூ.4500 அபராதம் மற்றும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார் . மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுப்ரமணி மற்றும் மாதேஸ் ஆகிய இருவருக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story