செங்கல்பட்டு மாவட்டத்தில் 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டத்தில்  702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- ஆட்சியர்

செய்தியாளர் சந்திப்பு 

செங்கல்பட்டு மாவட்டத்தில் 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.அருண்ராஜ் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.அருண்ராஜ் கூறியதாவது: தோ்தல் பணிகளுக்காக தோ்தல் ஆணையத்தால் பாா்வையாளா்களாக ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்கு அபிஷேக் சந்திரா(91505 95312), ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிகள் தோ்தல் காவல் பாா்வையாளா் பரத் ரெட்டி பொம்மரெட்டி, (63855 15308), ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் சந்தோஷ் ஷரன் (99403 53325) ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். பொதுமக்கள் தங்களது குறைகளையோ அல்லது ஏதேனும் சந்தேகம் இருப்பின் தோ்தல் பாா்வையாளா்களின் கைபேசி எண்களுக்கு நேரடியாக தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு பேரணிகள், துண்டுப் பிரசுரங்கள், கையொப்ப இயக்கம், தோ்தல் விழிப்புணா்வு பாடல் போன்றவை மூலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தொகுதியில் மொத்தம் 53 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 2,825 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக சோழிங்கநல்லூா் -234,பல்லாவரம்- 89, தாம்பரம்-85, செங்கல்பட்டு -130, திருப்போரூா்- 77, செய்யூா்- 46, மதுராந்தகம் -41 என மொத்தம் 702 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் அபிஷேக் சந்திரா, ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிகள் தோ்தல் காவல் பாா்வையாளா் பரத் பொம்மரெட்டி, ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் சந்தோஷ் ஷரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரனீத், தாம்பரம் துணைக் காவல் ஆணையா் பவன்குமாா் ரெட்டி, பள்ளிக்கரணை துணைக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story