இந்திய தேசிய காங்கிரஸின் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டம்

இந்திய தேசிய காங்கிரஸின் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா ராசிபுரம் நகர காந்தி மாளிகையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர்.

இந்திய தேசிய காங்கிரஸின் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா ராசிபுரம் நகர காந்தி மாளிகையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு ராசிபுரம் நகர தலைவர் ஸ்ரீராமுலு முரளி தலைமை வகித்தார் . ஏ.என். சண்முகம் அவர்கள் காந்தி மாளிகை டிரஸ்ட் போர்டு தலைவர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். திருமதி கவுன்சிலர் லலிதா பாலு மற்றும் திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் முன்னாள் கவுன்சிலருமான வி. பாலு அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மேலும் நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன் , சிறப்புரை ஆற்றினார். மற்றும் லலிதாபாலு கவுன்சிலர் 16வது வார்டுஅவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தும் விஐபி மாணிக்கம் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் டி.ஆர். சண்முகம் நன்றியுரை வாசித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கே.டி .இராமலிங்கம், பழனிசாமி, கோவிந்தராஜ், செட்டியார் ஜெயபால், வடிவேல் செட்டியார் ,முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, தேவராஜ் , தங்கவேல், தங்க கடை பிரகாசம், கூமுபா குமார், சுகுமார் இ.பி. சுப்பிரமணி, சாமுவேல், தங்கவேல், மதுரை வீரன், ஜோசியர் மூர்த்தி, ரங்கநாயலு, பழனிவேல், ராஜேந்திரன், மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவை காந்தி மாளிகை டிரஸ்ட் போர்டு மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ராசிபுரம் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Tags

Next Story