78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
X
அட்டை
கள்ளக்குறிச்சியில் நடந்த மருத்துவ முகாமில் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. சிறுவங்கூரில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். எலும்பு முறிவு மருத்துவர் வெங்கடேஷ், காது மூக்கு தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் விஜயகுமார், கண் மருத்துவர் சுரேஷ்குமார், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்ற 100 மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர். அதில் தகுதிவாய்ந்த 78 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் யு.டி.ஐ.டி., எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Next Story