79 வது சுதந்திர தினவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது, வளர்ப்பு யானைகள் தேசியக் கொடிகள் ஏந்தி அணிவகுத்து

X
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 79 வது சுதந்திர தினவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது, வளர்ப்பு யானைகள் தேசியக் கொடிகள் ஏந்தி அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றப்பட்டது, வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி சத்தம் எழுப்பி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் காட்சியை சுற்றுலா பயணிகள் அனைவரும் வியப்புடன் கண்டு ரசித்தனர்........ நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நின்றன. முதுமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் வித்யா மூவர்ண தேசிய கொடி ஏற்றினார், அப்போது முகாமில் அணிவகுத்து நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி சத்தம் எழுப்பி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்நிலையில் யானைகள் வளர்ப்பு முகாமில் நடைப்பெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் முதுமலை வருகை புரிந்திருந்தனர். தேசிய கொடிகளுடன் யானைகள் அனிவகுத்து நின்று மூவர்ண கொடிக்கு மரியாதை செய்ததை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
Next Story

