சங்கரன்கோவிலில் பணி நிறைவு விழாவில் திமுக வேட்பாளர் பங்கேற்பு
![சங்கரன்கோவிலில் பணி நிறைவு விழாவில் திமுக வேட்பாளர் பங்கேற்பு சங்கரன்கோவிலில் பணி நிறைவு விழாவில் திமுக வேட்பாளர் பங்கேற்பு](https://king24x7.com/h-upload/2024/05/30/530873-1000043544.webp)
சங்கரன்கோவிலில் பணி நிறைவு விழாவில் திமுக வேட்பாளர் பங்கேற்றார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் டாக்டர். ராணி ஸ்ரீ குமார் ராஜபாளையத்தில் தென்னக ரயில்வேயில் பணிபுரியும் தேவேந்திரன் என்பவரின் பணி நிறைவு விழா ஒன்றில் கலந்து கொண்டு அவருக்கு பாராட்டை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர் சிறுவயதில் எனக்கு ஊக்கத்தையும் அன்பையும் கொடுத்து என் வளர்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவரானவர் தேவேந்திரன் அவர்கள் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிகாரிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story