8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா வழங்கினார்
8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா வழங்கினார் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன மழை மற்றும் வெயில் காலங்களில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சிறப்பு காவலர்கள் அமர்ந்து கண்காணிக்கவும் இந்த நிழற்குடைகள் உதவியாக இருக்கும். இன்று காலை உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இந்த நிழற்குடைகளை வைக்கிங் நிறுவனம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா முன்னிலையில் போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என். எஸ். நிஷா இ .கா .ப அவர்கள் கலந்துகொண்டு போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார் இந்த நிகழ்வில் உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார், உதகை நகர மத்திய காவல் ஆய்வாளர் முரளிதரன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா ஆயுதப்படை ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள். போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்
Next Story



