ஆட்டோ கவிழ்ந்து 8 சிறுமிகள் படுகாயம்!

ஆட்டோ கவிழ்ந்து 8 சிறுமிகள் படுகாயம்!

விபத்து

பள்ளி சிறுமிகளை ஏற்றிக்கொண்டு கோபால்பட்டியிலிருந்து சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோபால்பட்டி அருகே சின்னகோம்பைபட்டியை சேர்ந்த செல்வகுமார் ஆட்டோவை, மொட்டையாகவுண்டன்பட்டி சேர்ந்த ஹரிஹரன் (22), நேற்று 12க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளை ஏற்றிக்கொண்டு கோபால்பட்டியிலிருந்து கே.அய்யாபட்டி நோக்கி சென்றார். செடிப்பட்டி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பள்ளி சிறுமிகள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story