ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் கந்தம்பட்டி நாராயணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 75). இவருடைய மனைவி பழனியம்மாள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 8 பேர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறும் போது எங்களது பூர்வீக நிலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ளது. ஒருவர் போலி ஆவணம் தயாரித்து அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இது குறித்து கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தை சுற்றி தற்போது அவர் இரும்பு வேலி அமைத்து உள்ளார். இது குறித்து கேட்டதற்கு மிரட்டல் விடுக்கிறார். எனவே எங்கள் நிலத்தை அபகரித்துக்கொண்டு மிரட்டல் விடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story