ரூ.5.26 கோடி மதிப்பில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 முடிவுற்ற திட்டப்பணிகள் - அமைச்சர் மரு. மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்

ரூ.5.26 கோடி மதிப்பில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 முடிவுற்ற திட்டப்பணிகள் - அமைச்சர் மரு. மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்

ரூ.5.26 கோடி மதிப்பில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 முடிவுற்ற திட்டப்பணிகள் - அமைச்சர் மரு மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்

ரூ.5.26 கோடி மதிப்பில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 முடிவுற்ற திட்டப்பணிகள் - அமைச்சர் மரு மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்

நாமக்கல், செப். 22 -நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலப்பள்ளிப்பட்டி, ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி, மத்துருட்டு, மங்களபுரம், ஆயில்பட்டி மற்றும் கார்கூடல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ரூ.5.26 கோடி 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார்.வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலப்பள்ளிப்பட்டி மற்றும் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் தலா ரூ.8.00 இலட்சம் என மொத்தம் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 22 எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்வில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமகிரிப்பேட்டை கழகச் செயலாளருமான கே.பி.இராமசுவாமிமற்றும் ஊராட்சி தலைவா்கள், கழக தொண்டா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.தொடர்ந்து, இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சியில் ரூ.9.16 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கு மாதா கோயில் முதல் பசிரிமலை சாலை வரை 130 மீ நீளம், 4.5 மீ அகலத்திற்கு சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், ரூ.9.16 இலட்சம் மதிப்பீட்டில் மாதா கோயில் அருகில் சிறுபாலம் அமைக்கும் பணி, ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் ரூ.10.25 இலட்சம் மதிப்பீட்டில் காத்தாகவுண்டனூர் ராஜ் வீடு முதல் சின்னதம்பி வீடு வரை 155 மீ நீளம், 4 மீ அகலத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.7.32 இலட்சம் மதிப்பீட்டில் காத்தாகவுண்டனூர் நடுவீதி நடேசன் வீடு முதல் டி.வி ரூம் வரை 82 மீ நீளம், 4 மீ அகலத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பாரத பிரதமர் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூர் மெயின் ரோடு முதல் சிங்கிலியன் கோம்பை சாலை வழி தாண்டாகவுண்டன் பாளையம் மூலக்காடு வேம்பாகவுண்டன் புதூர் வரை தார் சாலை அமைக்கும் பணி, ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் ஆயில்பட்டி ஊராட்சி ஊத்துப்புளிகாடு வழி ஆண்டிகுட்டை சாலை வரை தார் சாலை அமைக்கும் பணி, அயோத்திய தாசர் பண்டிதர் குக்கிராமம் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.75 இலட்சம் மதிப்பீட்டில் கார்கூடல்பட்டி ஊராட்சி, மெட்டாலா குக்கிராமம் புதுக்காலனி சரசு வீடு முதல் கனகராஜ் வீடு வரை கான்கீரிட் சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். பட விளக்கம் – நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலப்பள்ளிப்பட்டி, ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி, மத்துருட்டு, மங்களபுரம், ஆயில்பட்டி மற்றும் கார்கூடல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ரூ.5.26 கோடி 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்வில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமகிரிப்பேட்டை கழகச் செயலாளருமான கே.பி.இராமசுவாமிமற்றும் ஊராட்சி தலைவா்கள், கழக தொண்டா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Next Story