சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

கைது

கைது
கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளங்கோவில் புளியமர தோட்டம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக சிறுவலூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் சென்ற காவல்துறையினர் சேவல் சண்ணை சூதாட்டத்தில் ஈடுபட்ட நவின் , கார்த்தி , சூர்யபிரசாத் , பழனிச்சாமி , முருகேசன் , சுதாகர் , கவின் , கருப்புச்சாமி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 4 சேவல் மற்றும் பணம் 1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.

Tags

Next Story