தர்மபுரி மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 800 போலீசார்

தர்மபுரி மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 800 போலீசார்

மாவட்ட எஸ்பி

தர்மபுரி மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 800 போலீசார் தர்மபுரி, ஜன.1: தர்மபுரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்ததும், பொதுமக்கள் வான.வேடிக்கையுடன் ஒருவருக்கு ஒருவர் கைகளை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டு அமைதியாக கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

புத்தாண்டையொட்டி, மாவட்டம் முழுவதும் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 22 போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர். மேலும் தொப்பூர், காரிமங்கலம், நரிப்பள்ளி, மஞ்சவாடி கணவாயில், காடுசெட்டிப்பட்டி, திப்பம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட 10 இடங்களில் சோதனைசாவடி அமைத்து வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

குற்றங்களை தடுக்க, நேடுஞ்சாலையில் ரோந்து வாகனங்கள் 5ம்,நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் 10ம், இரு சக்கர ரோந்து வாகனங்கள் 55 மூலமாக கண்காணிக்கப்பட்டது . மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டூவீலரில் 2க்கும் மேற்பட்ட நபர்கள் சென்ற இரு சக்கர வாகனங்களை போலீசார் நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.போக்குவரத்தை சீர்செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்றநடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு தனிப்படையும், சட்ட விரோத செயல்கள் நடைபெறாவண்ணம் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

Tags

Next Story