800 செம்மரக்கன்றுகளை வெட்டிய மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

800 செம்மரக்கன்றுகளை வெட்டிய மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

செம்மரம்

அரக்கோணம் அருகே வருவாய்த்துறை அனுமதியுடன் விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்டு வந்த 800 செம்மரக்கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த மிட்டபேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கரன் (வயது 48). குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வருகிறார். இவர் பெருமாள்ராஜபேட்டை பகுதியில் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் வருவாய்த்துறை அனுமதி பெற்று சுமார் 2,500 செம்மர கன்றுகள் வளர்த்து வந்தார் இந்நிலையில் மர்ம நபர்கள் 800 செம் மரக்கன்றுகளை வெட்டி சாய்த்துள்ளனர்.இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் செம்மர கன்றுகளை வெட்டி நாசம் செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story