கெங்கவல்லி அருகே வாகன சோதனையில் ரூ.84,050 பறிமுதல்

கெங்கவல்லி அருகே வாகன சோதனையில் ரூ.84,050 பறிமுதல்
பைல் படம்


கெங்கவல்லி அருகே வாகன சோதனையில் உரியஆவணங்களின்றி எடுத்து வந்த 84,050 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத் துறைகிராமத்தில் புள்ளியல் அலுவலர் பெரியசாமி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாகவந்த டூவீலரை நிறுத்தி சோதனையிட்டதில், உரியஆவணங்களின்றி ₹84,050 எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, டூவீலரி வந்த காமக்காப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் விக்னேஷ்குமார் என்பவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பணத்தை கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கூடுதல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story