அமரகுந்தியில் 8ஆம் வகுப்பு மாணவர் மீது பைக் மோதி உயிரிழப்பு

அமரகுந்தியில் 8ஆம் வகுப்பு மாணவர் மீது பைக் மோதி உயிரிழப்பு

உயிரிழந்த மாணவர்

அமரகுந்தியில் 8ஆம் வகுப்பு மாணவர் மீது பைக் மோதி உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள அமரகுந்தி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜானூர், கல்லங்காடு பகுதியில் வசிக்கும் வைத்தியலிங்கம் மகன் மாதேஷ் என்பவருடைய மூத்த மகன் லலித் நேற்று மதியம் சுமார் 12 மணி ஒரு மணி அளவில் அமரகுந்தியில் இருந்து தொளசம்பட்டி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது தாரமங்கலத்தில் இருந்து தொளசம்பட்டி நோக்கி அதி வேகமாக வந்த ஒரு ஸ்பிளன்டர் என்ற இருசக்கர வாகனம் மாணவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு மாணவரை தாரமங்கலம் தனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்பொழுது தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த தொளசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story