சேலத்தில்17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 8-ம் வகுப்பு மாணவன் !!

சேலத்தில்17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 8-ம் வகுப்பு மாணவன் !!

சிறுமியை கர்ப்பம்

சேலத்தில்17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 8-ம் வகுப்பு மாணவனை போக்சோவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதியுற்றார். இதையடுத்து அவரை பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனை சிறுமியின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமி கர்ப்பமானது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமியும் அழகாபுரம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 8-ம் வகுப்பு படித்து முடித்த மாணவன் ஒருவனும் பழகி வந்துள்ளனர். பின்னர் இருவரும் நெருங்கி பழகியதன் மூலம் தற்போது சிறுமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story