9ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை பரபரப்பு சம்பவம்

மாங்காடு அருகே 9ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை.
மாங்காடு அருகே 9ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை. தாய் திட்டியதால் நேர்ந்த சோகம். மாங்காடு அடுத்த பரணிபுத்தூர், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் பூந்தமல்லியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் ரேணுகா(14), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் இவரது தாய் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது வீட்டில் ரேணுகா தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் ரேணுகாவை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரேணுகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன ரேணுகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் ரேணுகா கடந்த சில தினங்களாக பள்ளிக்கு சரியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பள்ளிக்கு தாமதமாக சென்றதால் ஆசிரியர்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் இதனால் பெற்றோர் ரேணுகாவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story