தொழிலாளியை தாக்கிய வழக்கில் 9 பேர் கைது!

தொழிலாளியை தாக்கிய வழக்கில் 9 பேர் கைது!

கோப்பு படம்

பேரணாம்பட்டு அருகே தொழிலாளியை தாக்கிய வழக்கில் 9 பேரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஷம்ஷீர் (32). தொழிலாளியான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் வரவழைத்து மது குடிக்க வைத்து கம்பு மற்றும் இரும்பு ராடால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

இதில் ஷம்ஷீர் படுகாயமடைந்தார். இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ஷம்ஷீர் கடந்த சனிக்கிழமை பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து தவுலத் அலி எனகிற கோரா (31) உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் தவுலத் அலி, அல்தாப் (28), முஜம்மில் (31), கிட்டு (32), உசேன் (26), ஜாகீர் (39), முபாரக் அலி (32), முன்னா (29), அப்ராஸ் (32) ஆகிய 9 பேரை போலீசார் செய்தனர்.

Tags

Next Story