புதுப்பையில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

புதுப்பையில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
சூதாட்டம்
புதுப்பையில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை வெள்ளகோவில் காவல்துறையினர் கைது செய்தனர்
வெள்ளகோவில் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் புதுப்பை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அங்குள்ள கரைப்பாலம் அருகில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சூதாடிய புதுப்பை செந்திலையாம் பாளையம் சேகர் 46, தர்மன் 52, தங்கமேடு வெங்கடாசலம் 52, செல்வராஜ் 57, புதுப்பை கடைவீதி மூர்த்தி 47, தாராபுரம் குளத்துப்பாளையம் சண்முகநாதன் 47, வெள்ளகோவில் காடையூரான் வலசு ராமன் 45, கரூர் மாவட்டம் தென்னிலை நீதி அம்மன் நகர் பாலசுப்பிரமணி 48, திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் தோப்பு வேலுச்சாமி 60 ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 சீட்டுக்கள் ரூ 31,000 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story