தர்மபுரியில் நோட்டாவுக்கு 9,082 வாக்குகள் பதிவு

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு 9,082 வாக்குகள் பதிவாகியுள்ளது.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது இதில் பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், திமுக வேட்பாளர் ஆ.மணி 4,28,569 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அசோகன் 2,91,177 வாக்குகளும், பாமக வேட்பாளர் சவுமியா 4,08,173 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 64,470 வாக்குகளும் பெற்றனர். இதில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றார். 23 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் நோட்டாவுக்கு 9,082 வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story