செய்யாறு பணிமனையில் 95 சதவீத பேருந்துகள் இயக்கம்

செய்யாறு பணிமனையில் 95 சதவீத பேருந்துகள் இயக்கம்

பேருந்து இயக்கம் 

செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 95 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனையில் காலை 5 மணி வரை பணிமனையில் உள் மொத்தம் 59 பேருந்துகளில் 54பேருந்துகள் இயக்கப்பட்டது ,காலை 5 மணி வரை 95 சதவீதம் பேருந்துகள் இயங்கின.பணிமனையில் நகர பேருந்துகளில் தற்காலிக பணியாளர்கள் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சோனியா தலைமையில் காவல்துறையினர் போக்குவரத்து பணிமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதிய பணியாளர்கள் போக்குவரத்து பணிமனை முன்பு கூடி வருகின்றனர். வழக்கம் போல பேருந்துகள் இயங்கி வருகின்றன. தற்போது வரை போராட்டம் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story