அருள்மிகு ஸ்ரீ சின்னக்காளி காளியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு 9-ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை!

தாராபுரம் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ சின்ன காளி காளியம்மன் கோவில் பண்டிகை முன்னிட்டு 9 ஆம் ஆண்டு - 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் எராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ, சின்னக்காளி காளியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு 9,ஆம் ஆண்டு 108, குத்துவிளக்கு 'பூஜை சின்ன காளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. குத்து விளக்கு பூஜைக்கு பெரியசாமி தலைமை வகித்தார். சின்ன காளியம்மன் நற்பணி மன்றத்தார் மணிகண்டன், சிவா, சரவணன், லோகேஷ்கண்ணா ஆகியோர் பூஜை நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 200,க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். குத்து விளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், ப்ளூ வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரவும் அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் இறுதியாக பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story