பெட்ரோல் குடித்த 3வயது குழந்தை உயிரிழப்பு

பெட்ரோல் குடித்த 3வயது குழந்தை உயிரிழப்பு

கோப்பு படம் 

கோவையில் தண்ணீர் என நினைத்து பெட்ரோல் குடித்த குழந்தை உயிரிழந்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீபால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் கோவை தெப்பக்குளம் மைதானம் தியாகராய வீதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இவர் ராஜவீதி சவுடம்மன் கோவில் பகுதியில் உள்ள இவரது உறவினரின் வாட்ச் கடைக்கு தனது மூன்று வயது குழந்தையான இமன்ஷு வை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கு வைத்திருந்த வைட் பெட்ரோலை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் .

இது குறித்து தினேஷ்குமார் உக்கடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குழந்தையின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story