கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி

பைல் படம் 

தேவூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. இவருக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். இதில் 3½ வயதுடைய கார்முகிலனை பெற்றோர் பாசத்துடன் வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் பெற்றோர் கார்முகிலனை தாத்தாவிடம் விட்டு விட்டு வெளியில் சென்றனர். இதையடுத்து தாத்தா வீட்டிக்கு பின்புறம் சென்ற நேரத்தில் குழந்தை கார்முகிலன் வீட்டில் அருகே உள்ள கிணற்றுக்கு சென்று உள்ளே தவறி விழுந்து இறந்தான். இதுகுறித்து குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி குழந்தை கார்முகிலனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். கிணற்றில் தவறி விழுந்து 3½ வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story