முதல் தடவை ஓட்டுப் பதிவு செய்த 63 வயது முதியவர்

முதல் தடவை ஓட்டுப் பதிவு செய்த 63 வயது முதியவர்

முதல் தடவை ஓட்டுப் பதிவு செய்த 63 வயது முதியவர்

செங்கல்பட்டு மாவட்டம், தொன்னாடு பகுதியை சேர்ந்த இருளர் சமூக முதியவர் 63 வயதில் முதன்முறையாக தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

சித்தாமூர் அருகே தொன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு, 63. இருளர் சமூகத்தை சேர்ந்தவர். கூலி வேலை செய்து வருகிறார். படிப்பறிவு இல்லாததால், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். அப்பகுதி இளைஞர்களின் முயற்சியால், சில மாதங்களுக்கு முன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை அய்யாக்கண்ணுவிற்கு பெற்றுத் தரப்பட்டது.

இந்நிலையில், 63 வயதான அய்யாக்கண்ணு, நேற்று நடந்த லோக்சபா தேர்தலில், தனது முதல் ஓட்டு செலுத்தினார். இதைத் தொடர்ந்து, அய்யாக்கண்ணு அரசு நலத்திட்டங்களை பெற, துறை சார்ந்த அதிகாரிகள் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story