உசிலம்பட்டி அருகே 70வயது மூதாட்டி பிணமாக மீட்பு

உசிலம்பட்டி அருகே  70வயது மூதாட்டி பிணமாக மீட்பு

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியில் அடையாளம் தெரியாத 70வயது மூதாட்டி பிணமாக மீட்கப்ட்டுள்ளார்.

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியில் அடையாளம் தெரியாத 70வயது மூதாட்டி பிணமாக மீட்பு.போலிசார் விசாரணை. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வலையபட்டி கிராமம்.இன்று காலை இப்பகுதி வழயாக நடந்து சென்றவர்கள் சாலையின் அருகேயுள்ள கிணற்றில் ஒரு மூதாட்டி விழுந்து கிடப்பதை பார்த்து போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

போலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டனர்..மூதாட்டிக்கு சுமார் 70வயது இருக்கலாமென்றும் இவர் யார் எந்த ஊர் என அடையாளம் தெரியாத நிலையில் தற்போதைய வெயிலுக்கு நடந்து சென்றவர் சுருண்டு விழுந்து இறந்தாரா? அல்லது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்தாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story