திருத்தணி அருகே ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது

திருத்தணி அருகே ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது

பெண் குழந்தையுடன் ஊழியர்கள்

திருத்தணி அருகே ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் கவி. இவரது மனைவி அபி (20). இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன் சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் 3.200 கிலோ எடையுடன் பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து தாயையும் குழந்தையும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவ வலி ஏற்பட்டதும் ஆம்புலன்ஸில் கொண்டு வரும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

Tags

Next Story