கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை

கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருகின்ற ஜூலை 5 கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராம கவுண்டர் தலைமை வகித்து பேசும்போது. உழவர் தின பேரணியில் விவசாயிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விவசாயிகள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் எனவும். சிங்காரப்பேட்டை அருகே உள்ள கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், பால் விலை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி வழங்க கோரியும், பால் உற்பத்தி மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தினை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

காட்டுப்பன்றிகளை சுட விவசாயிகளுக்கு துப்பாக்கியும், பயிற்சியும், அனுமதியும் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர். இதில் மாவட்ட துணைத் தலைவர் மாசிலாமணி, மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, ஊத்தங்கரை வட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், கோவிந்தன்,முத்து,ராஜீவ் காந்தி, சக்தி சங்கர், அனுமந்த் ராஜ், முனுசாமி,நடராஜ்,கோவிந்தன் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Tags

Next Story