கோத்தகிரி : குடியிருப்பு பகுதியில் உலா வந்த கருஞ்சிறுத்தை

கோத்தகிரி : குடியிருப்பு பகுதியில் உலா வந்த கருஞ்சிறுத்தை

சிசிடிவியில் பதிவான கருஞ்சிறுத்தை 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி அருகே பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து கரடிகள், சிறுத்தை காட்டெருமைகள் என அப்பகுதியில் உலா வருகின்றன. இன்று அதிகாலையில் கருஞ்சிறுத்தை ஒன்று அப்பகுதியில் உலா வந்துள்ளது. சிறுத்தையின் நடமாட்டம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story