சாலை விபத்தில் சிறுவன் பலி

சாலை விபத்தில் சிறுவன் பலி

விபத்தில் சிறுவன் பலி

சிவகங்கை மாவட்டம்,கட்டாங்குளம் பகுதியில் பஸ் டிரைவர் ஹாரன் அடித்ததால் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சரண்ராஜ் (33). மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தனது மனைவி அபிராமி (28). மகன் ருத்ரேஷ் (2). ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து 4 வழிச்சாலை வழியாக திருப்பாச்சேத்தி சென்றார். தட்டான்குளம் என்ற இடத்தில் குறுகிய வளைவில் திரும்பும் போது பின்னால் வந்த பஸ் டிரைவர் ஹாரன் அடித்ததால் அதிர்ச்சியடைந்த சரண்ராஜ் பழுதாகி நின்ற சரக்கு வேனின் பின்புறம் மோதினார்.

இதில் சரண்ராஜ் , அபிராமி காயமடைந்தனர். இரு சக்கர வாகனத்தின் முன்புறம் அமர்ந்திருந்த மகன் ருத்ரேஷ் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவன், மனைவி இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story