மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்!

மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்!

காவல்துறை விசாரணை


ஆரணி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி கடந்த 19-ந் தேதி கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு ஏரி வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது போளூரை சேர்ந்த ராமன் என்பவர் மாணவியை வழிமறித்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து தப்பி ஓடி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் ராமன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story