விராலிமலை அருகே மாணவியை கடத்திய வாலிபர் கைது

விராலிமலை அருகே மாணவியை கடத்திய வாலிபர் கைது

காவல் நிலையம் 

விராலிமலை அருகே மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விராலிமலை ஒன்றியம் மீனவேளியைச் சேர்ந்தவர் தர்மராஜ் மனைவி தேவி வயது 34 இவரது 16 வயது மகள் தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா ஆண்டிபட்டியை சேர்ந்த மலையப்பன் மகன் சத்தியசீலன் வயது 21 என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சத்தியசீலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags

Next Story