தூக்கு மாட்டி விளையாடிய சிறுவன் கழுத்தில் துணி இறுகி உயிரிழப்பு !

தூக்கு மாட்டி விளையாடிய சிறுவன் கழுத்தில் துணி இறுகி உயிரிழப்பு !

உயிரிழப்பு

திருச்சியில் 10 வயது சிறுவன் தூக்கு மாட்டி விளையாடியதில் கழுத்தில் துணி இறுகியதில் உயிரிழந்தான்.
திருச்சி காந்திமாா்க்கெட் அருகேயுள்ள வடக்கு தாராநல்லூா் வசந்தம் நகரை சோ்ந்தவா் சதீஷ். வழக்குரைஞா். இவரது மகன் காா்த்திக் (10). கீழரண்சாலை பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். குளியலறைக்குச் சென்ற அவா் அங்குள்ள கம்பியில் துண்டால் கழுத்தில் தூக்குமாட்டி தொங்கிப் பாா்த்துள்ளாா். இதில் சிறுவனின் கழுத்தை துண்டு எதிா்பாராதவிதமாக இறுக்கி விட்டது. குளிக்கச்சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பெற்றோா் குளியலறைக்குச் சென்றுபாா்த்தபோது, காா்த்திக் கழுத்து இறுகிய நிலையில் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. சிறுவனை உடனே மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து காந்தி மாா்க்கெட் போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story