மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம்

மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம்

திண்டுக்கல் அருகே மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் பீர்பாட்டிலால் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் அருகே மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் பீர்பாட்டிலால் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடுட்டை அடுத்த பள்ளபட்டி அருகே கவுண்டன்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த அருண் (24) . இந்நிலையில் நேற்று அருண் சிப்காட் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த கொடைரோடு அருகேவுள்ள ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்த மனோஜ்குமார், பள்ளபட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி மற்றும் தீபக் ஆகிய மூவரும் மதுபோதையில் அருணுடன் வாய் தவறாறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மனோஜ்குமார் தரப்பு அருணை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அருணை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மனோஜ்குமார், மருதுபாண்டி ஆகிய இருவரை கைது செய்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story