பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

 வீணாகும் குடிநீர்

குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் அரிப்பு காரணமாக சாலை சேதம் அடைந்துள்ளது
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரிய காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதி, ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் நுழைவாயில் வளைவு அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில், கடந்த ஜனவரி மாதம் உடைப்பு ஏற்பட்டு, 6 மாதமாக குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் அரிப்பு காரணமாக சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, செங்கழுநீரோடை வீதியில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறுகையில், ''காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Tags

Next Story