செய்யூர் அருகே நிலதகராறில் தம்பியை கொன்ற அண்ணன்

செய்யூர் அருகே நிலதகராறில் தம்பியை கொன்ற அண்ணன்
நில தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் மற்றும் அண்ணன் மகன்கள்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நில தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் மற்றும் அண்ணன் மகன்களை போலீசார் விசாரணை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே உள்ள ஆக்கிணாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த அரிகிருஷ்ணன்( 47) அவருடையஅண்ணன் கோதண்டன் (50) அவருடைய மகன்கள் கோவிந்தராஜ்( 30) பொன்னம்பலம்( 26) ஆகியவர்களுக்குள் நீண்ட நாட்களாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. தம்பி ஹரிகிருஷ்ணன்( 47 )என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அண்ணன் கோதண்டன்(50 )என்பவருக்கும் தம்பி ஹரிகிருஷ்ணனுக்கும் வரப்பு வெட்டுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு ஒரு சமயத்தில் கைக்கலப்பில் ஆரம்பித்தது தம்பி அரிகிருஷ்ணனை அண்ணன் கோதண்டன்,

மற்றும் அவருடைய மகன்கள் கோவிந்தராஜ்( 30 )பொன்னம்பலம் (26 )மூவரும் சேர்ந்து அரிகிருஷ்ணனை கையில் இருந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமுற்ற ஹரிகிருஷ்ணனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த ஹரி கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தி அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த செய்யூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story