சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து - பரபரப்பு

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து - பரபரப்பு

பேருந்தில் தீ விபத்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து பெங்களூரில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் தருமபுரி வழியாக பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்துள்ளது, பேருந்தில் தென் காசியை சேர்ந்த ஓட்டுநர்கள் அப்துல் அமீது , அலிஅக்பூர் ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். நல்லம்பள்ளி அருகே சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் மேம்பால சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிவதை அறிந்த ஓட்டுநர்கள் இருவரும் அப்படியே பேருந்தை சாலையில் நிறுத்தி விட்டு பேருந்திலிருந்து இறங்கி தப்பியுள்ளனர்.சிறிது நேரத்திற்கெல்லாம் பேருந்து முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது.

தகவலறிந்து தருமபுரியிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரண்டு தீயணைப்பு வாகனங்ள் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயி்ர்ச்சேதமோ ஏற்படவில்லை, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. விபத்து குறித்து தொப்பூர் தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் சாலையின் இரு புறமும் இணைப்பு சாலைகள் இருந்ததால் பெரிதாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பேருந்திலிருந்த ஏ சி அல்லது, இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப காரணத்தினால் தீ பற்றியிருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது, தீ விபத்து எதனால் நடந்தது என்ற முழுமையான காரணம் தெரியவில்லை. பல லட்ச ரூபாய் மதிப்பிலான பேருந்து தீயில் எரிந்து சேதமானது.








Tags

Next Story