கன்று குட்டி நாட்டு வெடிகுண்டை கடித்து படுகாயம்

கன்று குட்டி நாட்டு வெடிகுண்டை கடித்து படுகாயம்

கன்று குட்டி

ஆம்பூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற கன்று குட்டி நாட்டு வெடிகுண்டை கடித்து தாடை கிழிந்து படுகாயம்.
திருப்பத்தூர்மாவட்டம் ஆம்பூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற கன்று குட்டி நாட்டு வெடிகுண்டை கடித்து தாடை கிழிந்து படுகாயம். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியை சேர்ந்த பவின் குமார் பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வரும் நிலையில் இன்று காலை மேய்ச்சலுக்காக பாலாற்றங்கரைக்கு கொண்டு சென்ற பொழுது அங்கே மேய்ச்சலில் இருந்த கன்று குட்டி ஒன்று பாலாற்றங்கரையில் கொட்டப்பட்டிருந்த காய்கறி கழிவுகளை சாப்பிடும் பொழுது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுவின் தாடை கிழிந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் பன்றிகளை பிடிப்பதற்காக இதுபோல வெடிகளை வைத்து பன்றிகளை வேட்டையாடுவதாகவும் இந்த வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் எதிர்பாராத விதமாக இந்த நாட்டு வெடிகுண்டை பசுகன்று கடித்ததால் தாடை கிழிந்து சேதம் அடைந்து உயிருக்கு போராடுவதாகவும் பவீன் குமார் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story