கரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து

கரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து

காவல் நிலையம் 

கரூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்துக்கு உள்ளானது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, ஆண்டாங் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனிமகன் ராஜசேகர் வயது 34. இவர் மார்ச் ஒன்றாம் தேதி காலை 7:45 மணி அளவில், சிந்தாமணிபட்டியில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார்.

பிறகு வீரமலை பாளையம், சக்திவேல் தோட்டம் அருகே சென்றபோது டூவீலரை நிறுத்தி, அருகிலேயே நின்று கொண்டு இருந்தார். அப்போது திருச்சி மாவட்டம், மணப்பாறை, பெரியப்பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் பாண்டியன் என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார்,

டூவீலர் உடன் நின்று கொண்டு இருந்த ராஜசேகர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜசேகருக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவரது டூவீலரும் சேதமடைந்தது. உடனடியாக ராஜசேகரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ராஜசேகர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags

Next Story